கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:


                              நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது SDPI கட்சியின் வளர்ச்சி மறுக்க முடியாத அளவில் உள்ளது.மக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து  உள்ள செல்வாக்கு கட்சியின் பாராபட்சமற்ற சமுதாய பணிகளே காரணம் ஆகும்.அதனால்தான் இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றியடைய முடிந்தது.போட்டி இட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னணி கட்சிகளைவிடவும் அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.முக்கியமாக சில வாக்குகள் வித்யாசத்தில்  இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.முதன் முதலில்  இதுபோன்ற  ஒரு அங்கீகாரம் கிடைத்தது  கட்சியின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.மதவாத கொள்கையை மையமாக வைத்து அரசியல் நடத்திய பிஜேபி அரசை மக்களே ஒதுக்கிவிட்டனர்.அதன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவி உள்ளனர்.மோடியை முன்னிறித்தி செய்த பிரச்சாரங்கள் மோடியை மக்கள் வெறுப்பதை காட்டுகிறது.தேர்தலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ள பிஜேபி அலுவலகத்தில் குண்டுவெடிப்பை நடத்தி அதை அப்பாவி முஸ்லீம்கள் மேல் சுமத்தியும், தமிழ்நாட்டை சேர்ந்த சில அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்தும்,கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டு  இருந்த PFI (popular front of india) உறுப்பினர்களை  ஆயுதபயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று கைதுசெய்ததும் அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் மட்ட அரசியலை காட்டுகிறது.இதன் மூலம் SDPI கட்சிக்கு மக்களிடம் அவப்பெயரை உண்டாக்கவும்,கரநாடகாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி செய்தனர்.ஆனால் இறைவன் அவர்களின் சதிகளை முறித்து அவர்களை தோல்வி அடைய  செய்தான்.மதவாத சக்திகள் வட இந்தியாவை போல தென் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் தோல்வி தழுவியது.     பிஜேபி மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பே மக்கள் காங்கிரஸ் அரசை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தது.காங்கிரஸ் அரசு மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் இந்த மதவாதிகளின்,இந்துத்துவ அரசியலையும் ஒழிக்க முன் வர வேண்டும்.குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.அப்பாவி முஸ்லீம்களை கைது  செய்தவர்களை விடுவிக்க வேண்டும்.இல்லையென்றால் காங்கிரஸ் வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். கர்நாடக போலீஸ் தமிழ்நாட்டில் புகுந்து அப்பாவிகளை கைது செய்ய அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும் தன் போக்கை மாற்ற வேண்டும்.அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஒன்றாகி விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொன்னதும் உடனே நிறைவேற்றிய அரசு இந்த விசயத்தில் பல போராட்டங்கள் நடந்த பின்னும் அமைதி காப்பது அழகல்ல.கோவையில் மீண்டும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் சில சம்பவங்கள் நடைபெறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஆனால் மரக்காணத்தில் உடனடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்தது.இந்த நீதி முஸ்லீம்களுக்கும் கிடைக்க வேண்டும். SDPI கட்சியின் தாரக மந்திரம் சம உரிமை,சமநீதி,சம பாதுகாப்பு..அரசியல் லாபம் இல்லை.மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கட்சி இல்லை..அனைத்து
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி  ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!


8:13 PM | தலைப்பு: , , , , | Read More »

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “பள்ளி செல்வோம்” பிரச்சாரம்!


மனித வாழ்வினை மேம்படுத்தி நல்லொழுக்கத்தையும், மன வலிமையையும், பரந்த  அறிவையும், சுய வலிமையையும் தருவதுதான் கல்வி. தனி மனித முன்னேற்றம், குடும்ப முன்னேற்றம், சமூக முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் இவையெல்லாம் கல்வியின் மூலமே சாத்தியப்படும். சமூகத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளகற்ற தேவையான ஆயுதம் கல்வி மட்டுமே.
இவ்வுலகில் கல்விக்குக் கண் தந்த மார்க்கம் இஸ்லாம்! திருக்குர்ஆனின் முதல் வசனமே இக்ரஃ : படிப்பீராக!” என்றுதான் துவங்குகிறது. அதாவது கல்வி கற்றலின் அவசியத்துடன்தான் திருக்குர்ஆன் துவங்குகிறது. கல்வி ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அதனை கிடைக்குமிடமெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.ஒரு நாட்டிற்கு கல்வியில் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மேம்பாடு என்பன மிக முக்கியமானவை. அதே போல் ஒரு சமுதாய வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. ஒரு நாட்டிலுள்ள மிகப் பெரும் சிறுபான்மைச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு, அதன் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாகவும், வறியவர்களாகவும் இருந்தால் அந்த நாடு உண்மை யான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டவே முடியாது.
இந்திய முஸ்லிம்களின் துயர நிலையைப் பாரீர்! அவர்கள் அனைத்து அம்சங்களிலும் தலித்துகளை விட பின்தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி தெளிவாகக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஒரு குழந்தை கூட பொருளாதார நெருக்கடியினாலோ, இன்னபிற காரணத்தினாலோ பள்ளிக்குச் செல்லாமல் இருந்திடக் கூடாது என்ற நோக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பள்ளி செல்வோம் (School Chalo) பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்தப் பிரச்சாரத்தில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன:
1. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
2. உள்ளூர் கல்விக்கூட அதிகாரிகளின் உதவியுடன் மேற்கண்ட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படுகின்றது.
3. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
4. மாணவர் பேரணிகள், தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் அம்சங்கள்.
5. பிரச்சாரத்தின் முக்கிய பாகமாக ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிப் பைகள் (Free School Kits) வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 12 மாநிலங்களில் 491 கிராமங்களில் 64,032 இலவச பள்ளிப் பைகளை வினியோகித்துள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பாகமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த வருடம் இந்தப் பிரச்சாரத்தை 13 மாநிலங்களில் மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பள்ளிப் பைகள் வினியோகிக்கப்படும்.

மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 26,000 பள்ளிப் பைகள் (School Kits) வினியோகிக்கப்பட்டன.

ஒரு பள்ளிப் பையின் விலை : ரூ. 300.00

கல்வி அறிவை வழங்கும் இந்தப் புனிதப் பணியில் நாமும் இணைவோம். ஸதக்கத்துன் ஜாரியா என்ற நிரந்தர தர்மத்தின் பலனை அடைவோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகம் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6:44 PM | தலைப்பு: , , | Read More »

முஸ்லிம்களுக்கு எதிராக விதைக்கப்படும் விஷமங்களும்;அளிக்கப்படும் அநீதியும்:


நண்பர்களே!மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளவும்  இந்த கட்டுரையை எழுதுகிறேன்.நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே கண்ணை மூடி கொண்டு முஸ்லீம்கள் மீது பழி  போட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதி என்று பல வருடங்களாக சிறையில் அடைப்பதும்,உண்மையான குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் அவர்களை வெளியேவிடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்வதும்,வெளியே வந்தாலும் மீண்டும் மற்ற வழக்குகளில் கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நாட்டின் மதச்சார்பின்மையும்,இறையாண்மையும்,நீதித்துறையும் சந்தேகம் அடைய வைக்கிறது.உதாரணமாக சில சம்பவங்களை தருகிறேன்.

1.சம்ஜவுதாரயில்குண்டுவெடிப்பு:
Feb 18 2007
68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் (குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

2.மாலேகான் குண்டுவெடிப்பு-1:
Sep 8 2006
37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்

3.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:

May 18 2007
14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா

4.அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

5.அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:
Oct 11 2007
3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

6.மாலேகான் குண்டுவெடிப்பு-2:

Sep 29 2008
7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

7.தானே சினிமா குண்டுவெடிப்பு:

Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

8.கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி. பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

9.கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தை
த் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர்காயமடைந்தனர்.இதி்ல் குற்றம் சாட்டப்பட்ட சித்திக் குற்றம் நிருபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை..

                                        

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..

                                    

இவர்களின் நோக்கம் எல்லாம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களின் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதே.இவர்களின் இந்த செயல்களை அரசும் கண்டும் காணமல் இருப்பதுதான் வேதனை..இவர்கள் எல்லாம் வெளியே உல்லாசமாக உலவி கொண்டு இருக்கும்போது நாட்டில் இன்னும் பல குண்டு வெடிப்புகள் நிகழத்தான் செய்யும்.இவர்களையும்.அந்த அமைப்புகளையும்  அரசு தண்டிக்கும்போது நாட்டில் அமைதி நிலவும்...அன்றுதான் நாம் அனைவரும் பெருமைப்பட முடியும் இந்தியா ஒரு மதச்  சார்பற்ற நாடு என்று..

3:09 PM | தலைப்பு: , , , | Read More »

குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடியா காரணம்?

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.
மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.
குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.
அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.


மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.
தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.


அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.
2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன?


மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.
குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.


தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.
ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.


இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.
அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.


செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
---மேலும் மோடியை ஆதரிக்க அவர் ஒரு நடுநிலைவாதி அல்ல.குஜராத் வழககுகளில் அவர் பெயர் இன்னும் உள்ளதும் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம்.காங்கிரஸ்,பிஜேபி தவிர மூன்றாவது அணியில் ஒருவர் பிரதமர் ஆனால்தான் இந்தியா ஒளிரும்..இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்பது என் அபிப்ராயம் ....

1:12 PM | தலைப்பு: , , , , | Read More »

தங்க குணம் படைத்தவன் - ஸூகர் சர்னயெவ்

2011 ஆம் ஆண்டு மே மாதம்  காம்பிரிட்ஜ் நகரத்தின் சார்பாக தனது உயர் கல்விக்காக 2500 டாலர் ஊக்கத்தொகையாக பெற்ற 19 வயதே நிறைந்த இந்த மாணவனை தீவிரவாத குற்றம் சாட்டி கைது செய்திருக்கிறது போஸ்டன் காவல் துறை. இந்த மாணவனின் பெயர் ஸூகர் சர்னயெவ்.

போஸ்டன் குண்டுவெடிப்பை தொடர்ந்து கண்காணிப்பு காமெராவில் பதிவு செய்யப்பட்ட தரம் குறைந்த புகைப்படங்கள்  வெளியானதும் ரஷ்யாவின் செச்ன்யா பகுதியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகள் (ஸூகர் சர்னயெவ் மற்றும் அவரது மூத்த சகோதரர் டாமர்லென்) அமெரிக்க அரசால்  தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.  இதில் சர்னயெவின் மூத்த சகோதரர் தேடுதல் வேட்டையில் நடத்த துப்பாக்கிச் சண்டையில்(?) போலீசாரால் சுட்டுக் கொல்லபட்டார்.

தற்பொழுது போலீசார் கைது செய்த 19 வயதே நிரம்பிய ஸூகர்  சர்னயெவ் குறித்த  வதந்திகள் ஊடகங்களில் வந்ததும் இவரை அறிந்தவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இவரது தந்தை அன்ஸூர் இவரை குறித்து ”தி அசோசியேட் பிரஸ்” (The Associated Press) க்கு தொலைபேசி மூலம் கூறுகையில் "எனது மகன்  இரண்டாம் வருட மருத்துவ மாணவன், அவன் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவன், அவனை இந்த விடுமுறைக்கு எங்களை காண வருவான் என்று எதிர் பார்த்தோம் " என்று கூறினார்

மேலும் தன்  மகன்கள் அப்பாவிகள் என்றும் அரசு அவர்களை திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளாக்கி உள்ளது என்று கூறினார். தனது மூத்த மகனை போலீசார் கொன்று விட்டனர் தன் மற்றொரு மகனையும் போலீசார் கொலை செய்து விட்டால் இது திட்டமிட்ட சதியே என்று உறுதியாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களை குறித்து இவர்களின் தாயார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "எனது மகன்கள் இருவரும் நிரபராதிகள், அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்றும் இது ஒரு சதி என்றும் கூறினார். மேலும் FBI  அதிகாரிகள் தனது மகனை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஒரு ரஷ்ய சமூக வலை தளத்தில் உள்ள ஸூகரின் பக்கத்தில் அவர் கேம்பிரிஜ் ரின்டே மற்றும் லத்தின் பள்ளியில் பயின்று 2011 இல் தேர்ச்சி பெற்றதாக குறிபிடப்பட்டுள்ளது. அதே வருடம் தனது மேல்படிப்பிற்க்காக அவர் 2500 டாலர் ஊக்கத்தொகையும்  பெற்றுள்ளார். அந்த சமூக வலை தள பக்கத்தில் அவர் செச்ன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய  மொழி பேசுபவர் என்றும், தனது மீதான உலகத்தின் பார்வைக்கு இஸ்லாம் தான் காரணம் (இது தான் தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் இவரை தீவிரவாதி ஆக்கியதன் முதன்மை காரணம்) என்றும், தனது தனிப்பட்ட இலக்கு தொழில் மற்றும் பணம் என்றும் குறிபிட்டுள்ளார்.


போஸ்டன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின் ஸூகர் சர்னயெவ் தனது @J_ tsar என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் "Ain't no love in the heart of the city, stay safe people" (நகரத்தின் இதயத்தில் அன்பு இல்லை, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்) என்று பதிந்துள்ளார். உலக வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தீவிரவாதி(?) இவராகத்தான் இருக்க முடியும்.


இவரை போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று அறிந்ததும் அவரை அறிந்த பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 
அந்த வானொலி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய ஸூகர் இன் சமூகவியல் ஆசிரியர் ஸூகர் பற்றி கூறும்பொழுது "தங்க குணம் படைத்தவன் என்றும் அவன் மொத்தமாகவே ஒரு சிறந்த சிறுவன் " என்று கூறியுள்ளார். ஸூகர் இன் மூத்த சகோதரர் டாமர்லென் குத்து சண்டை வீராவார். இவரை குறித்து வேறொரு நாடு விசாரணைக்காக கோரிக்கை விடுத்ததை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் FBI  விசாரணை செய்தது என்று கூறியுள்ளார். இந்த விசாரணையில் டாமர்லென்  இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவராகவும், ஐவேளை சரியாக தொழுபராகவும் 2010இல் இருந்து அவரது போக்கில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து விசாரணைக்கு கோரிய நாட்டிற்கு செல்ல முற்பட்டதால் இந்த விசாரணையை அந்நாடு கோரியதாகவும் FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இவரை விசாரிக்க கோரிய நாடு (இஸ்ரேல்?)

இவர் ஒரு அமெரிக்க  பெண்ணை திருமணம் முடித்து இவர்களுக்கு மூன்று வயது மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிட தக்கது. இந்த குண்டு வெடிப்பே அரசாங்கம் நடத்தியதுதான் என்று பலர் நம்பி வரும் வேளையில், ஸூகர் சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்தார்கள் என்பதையும் தவிர வேறு எந்த ஒரு சிறு ஆதாரத்தையும் அதிகாரிகள் முன் வைக்க வில்லை. ஆனால் பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் இவர்கள் முஸ்லீம்கள் என்று கூறி வருவது அமெரிக்காவில் நிலவி வரும் முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி மூலம் இவர்களை குற்றவாளிகள் ஆக்கவும் மேலும் முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை அதிக படுத்துவதற்க்குமே ஆகும். இந்திய பத்திரிக்கைகளும் இவர்களின் கைது நடவடிக்கையை ஒரு கேலிக்குரிய செய்தியாக்கி வருகின்றன.
இனி இவர்களுக்காக ஏற்கனவே ஜோடித்து வைக்கப்பட்ட கதைகளை அதிகாரிகள் பத்திரிகைகள் வாயிலாக மக்களின் மழுங்கிய மூலையில் ஏற்றி இவர்களை குற்றவாளிகள் ஆக்கிவிடுவார்கள்.
மூன்று பேர் பறிபோன இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் வேட்டை, துப்பாக்கிசூடு, கைது என்று நாடகமாக ஆக்கி மறுபுறம் இதனை தொடர்ந்து 70 பேரை பலி கொண்ட Texas  மாகாண உர தொழிற்சாலை வெடிப்பை மறைகின்றனரோ என்ற சந்தேகமும் உள்ளது. நாளை அதனை நடத்தியவர்களும் இவர்கள் தான் என்று புது கதைகளும் வரலாம்.

செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இஸ்ரேல்
கடைசி புதுபிப்பு : 14:38

9:59 AM | தலைப்பு: , , | Read More »

டில்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நியாயம் வேண்டி வலுக்கிறது போராட்டம்

டில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கடந்த வெள்ளியன்று டில்லி எய்ம்ஸ்(AIIMS)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பேச்சுமூச்சற்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.K.சர்மா தெரிவித்தார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளி மனோஜ்குமார் பீஹாரின் முஜப்பர்பூர் என்ற கிராமத்தில் ஒளிந்திருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். அவனுக்கு வயது 22.

பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார்
டில்லி காந்திநகரில் உள்ள, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வசித்து வருகிற அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் குடியிருந்த குற்றவாளி மனோஜ், சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி தன் வீட்டிலேயே இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இன்றி அடைத்து வைத்திருந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமி இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தேடிவந்த அவளின் குடும்பத்தினர் புதன் கிழமையன்று சிறுமியையை மீட்டனர்.

மனோஜ்குமார் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, மூன்று நாளைக்குள் டில்லி காவல்துறையின் வசம் குற்றவாளி ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் 200மி.லி ஹேர் ஆயில் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகள் ஆகியவை சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு இழைந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியும் போரட்டகாரர்களும் பொதுமக்களும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முன்பாகவும் டில்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் போரட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

7:30 PM | தலைப்பு: , , , , , | Read More »

மோடியின் அரசியல் நாடகம்.

குஜராத் அரசு 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்க்கலவரத்தில் ஆயுள் தண்டனை அளிக்கட்பட்ட மாயா கோட்னானி,பாபு பஜ்ரங்கி  உட்பட 10  பேரின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க போவதாக அரசு வழக்கறிஞர் கௌரங்க் வியாஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி தன் மேலே உள்ள மதச் சாயத்தை மறைக்க தனது சகாக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார்.தனது இமேஜ் இதன் மூலம் பெரியதாகவேண்டும் என்று எண்ணி வேஷம் போடும் மோடியை பற்றி பாமர மக்களும் அறிவார்கள்.இவர் இத்தனை வருடங்கள் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ன? கலவரத்தில் அப்பாவி மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வார்த்தையால் சொல்ல முடியாத கொடுமைகளால் கொன்றவர்களுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்தாரே!. தெகல்ஹாவில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் நாடே அவர்களை தண்டிக்க கோரியபோதும் எங்கே போய் இருந்தார் இந்த நீதிமான் மோடி?. மாறாக மாயா கோட்னானிக்கு MLA ,அமைச்சர் பதவியும், மதன் சாவலுக்கும் ,ஹரீஸ் பட்டுக்கும் குற்றவாளிகள் என்று தெரிந்த பின்னர்தானே MLA பதவி கொடுத்தார்.ஆனால் இன்று தன் முன்னேற்றத்துக்கு தடை என்று தெரிந்ததும் அவர்களை பலி  கொடுக்க துணிந்துவிட்டார். 
ஊடங்களின் உதவியுடனும் காங்கிரஸ் அரசுக்குள்ள எதிர்ப்புணர்வையும்  பயன்படுத்தி எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார் மோ(கே)டி. ஆனால் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மதசார்பற்ற கட்சிகளும் அவரின் கனவை தகர்க்க வேண்டும். இவர்களை எல்லாம் விட கலவரத்தில் மூன்று நாட்கள்  அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க முக்கிய காரணகர்த்தவே இந்த மோடிதான்.முதலில் தண்டிக்க பட  வேண்டியதும் அவர்தான்.தூக்கிலிடப்பட வேண்டியவரும் இவரே.

8:14 AM | தலைப்பு: , , , , , | Read More »

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்......


டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், டெல்லியில் இக்கொடுமை ஒரு தொடர் நிகழ்வாகவே உள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் அருகே நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்மாணவியை காரில் தூக்கிப் போட்டு அருகில் உள்ள சரோஜினி நகருக்கு கடத்திச் சென்றது. இந்த கும்பலில் ஒருவர் அம்மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து காரில் வைத்தே அம்மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு, அம்மாணவியை ஓடும் காரிலிருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியை குலுக்கிய நிலையில் மீண்டும் அதுபோன்ற தொரு சம்பவம் அரங்கேறியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.துபோன்ற குற்றங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு தனிகவனம் எடுத்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

3:55 PM | தலைப்பு: , , , , | Read More »

பெங்களூரில் (தேர்தல்) குண்டு வெடிப்பு!


பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட  KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த  8 போலீசார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 2 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. முதலில் இது பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திய ஆம்னி வேனின் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது இரண்டு கார்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி குண்டினால் ஏற்பட்டது என்று காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவுராத்கர் தெரிவித்துள்ளார்

இதற்க்கு முந்தைய குண்டுவெடிப்பு இதே தேதியில் IPL போட்டிக்கு முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்தது. இதன் தொடர்பாக அப்துல் நாசர் மதானி எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
மூத்த காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்,  நீல நிற சுசுகி மோட்டார் சைக்கிளில் டைமர் வகையை சார்ந்த IED  குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது என்று  கூறினார். மேலும் அந்த சுசுகி பைக் முந்தைய இரவு அங்கு நிருத்தபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகின்றனர். இந்த வெடி குண்டு தாக்குதலின் விசாரணைக்கு பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்ட CCTV காமெரா உதவும்(?) என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி L.R. பாச்சாவ் கூறுகையில், தற்சமயம் குண்டு வெடிப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும், எந்த வகையான குண்டு வெடிக்க வைக்கப்பட்டது என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஜன்னல்களில் இருந்து நொறுங்கிய கண்ணாடி  துகள்களால் சூழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமையத்தில் KSRP வேனில் இருந்த தலைமை காவலர் வெங்கடேசையா ஹிந்து பத்திரிக்கையிடம்  கூறுகையில், வெடி குண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாங்கள் பெரும் சப்தத்தை கேட்டோம். எங்களால் எதனையும் சரியாக காண முடியவில்லை. முற்றிலும் புகை மூட்டமாக இருந்தது. புகை விலகியதும் மக்கள் சாலையில் விழுந்து கிடந்ததை கண்டோம். அதில் பெரும்பாலானோர் புகை மற்றும் சிதறிய கண்ணாடி துண்டுகளால் காயமடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக  பா.ஜ.க அலுவலகத்திற்கு அருகிலிருந்த போலீஸ் வேன் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று பா.ஜ.க தொண்டர்கள் புகார் கூறியதால்  வெடிப்பு நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. இடம் மாறிய சில நொடிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது  என்று கூறினார்.


இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை K.C. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடந்த தெரு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அசோக், கட்சி அலுவலகத்தையும் சம்பவ இடத்தையும் பார்வை இட்டார்.

இதனிடையில் இந்த குண்டு வெடிப்பை முன்னிறுத்தி அரசியல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத், இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க வின் தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் பா.ஜ.க ஆதரவு செய்தி ஊடகங்கள் இந்த குண்டு வெடிப்பை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திருப்ப நேரடி மற்றும் மறைமுக உக்திகளை கையாண்டு வருகின்றனர். http://www.oneindia.in/ என்ற செய்தி தளம் பெங்களுர் குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிட்ட அனைத்து பக்கங்களிலும்அந்த செய்திக்கு கீழ் அப்துல் நாசர் மதானி குறித்த வீடியோ பதிவையிட்டு இருக்கின்றது. இது போன்ற செயல்கள் தொடர்பில்லாத நிகழ்வுகளை தொடர்
பு படுத்தி பார்க்க உறுதுணையாய் அமையும்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு ஆதராமில்லாமல் விடுவிக்கப்பட்டு வரும் வேளையில் இது போன்ற செய்தி மக்களை திசைதிருப்பும் முகமாக அமையும். புதிய தேச வாசகர்கள் http://www.oneindia.in/ தளத்தின் இந்த செயலை கண்டித்து அந்த பதிவுகளை நீக்க கோரி மின்னஞ்சல் அனுப்பலாம்.

7:32 PM | தலைப்பு: , , , , | Read More »

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” - Westboro Baptist Church


அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்காக அமெரிக்க மக்கள் அனைவரும் வருந்தி வரும் வேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஓரின சேர்க்கை திருமணத்தை கண்டித்து கடவுள் அனுப்பிய தண்டனை என்று  வெஸ்ட் போரோ பாப்டிஸ்ட் சர்ச் (Westboro Baptist Church) கூறியுள்ளதாக வாஷிங்டன் டைம்ஸ்  (Washington Times) பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” என்று அந்த சர்ச்சின் டிவிட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தை தடுப்போம் என்றும் அந்த சர்ச் மிரட்டியுள்ளது.

அமெரிக்க அரசு இந்த குண்டு வெடிப்பினை தீவிரவாத செயல் என்று அறிவித்த பொழுதும் இதற்கு காரணமானவர்கள் உள்நாட்டுத் தீவிரவாதிகளா இல்லை வெளிநாட்டுத் தீவிரவாதிகளா என்று உறுதியாக கூறவில்லை.

வெஸ்ட் போரோ சர்ச் கூறுகையில், "இந்த குண்டுகளை கடவுள் அனுப்பினார், நீங்கள் நாட்டை அழிவிற்கு எடுத்துச் செல்ல கூடிய ஓரின  திருமணத்தை ஆதரிப்பதனால் உங்கள் நாட்டு மக்களை இன்னும் எத்தனை வழிகளில் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைகின்றீர்கள்" என்று கூறியுள்ளது.

 ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) பத்திரிக்கை இதனைக் குறித்து கூறிகையில், வெஸ்ட் போரோ சர்சினால் போஸ்டனில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த சர்ச் இணைய தள ஹாக்கர்  குழுமமான அனானிமஸ் கோபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

“If WBC protests the Boston funerals, they will have to expect us” என்று அனானிமஸ் தனது டிவிட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளது.



12:52 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added