|

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்......


டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், டெல்லியில் இக்கொடுமை ஒரு தொடர் நிகழ்வாகவே உள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் அருகே நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்மாணவியை காரில் தூக்கிப் போட்டு அருகில் உள்ள சரோஜினி நகருக்கு கடத்திச் சென்றது. இந்த கும்பலில் ஒருவர் அம்மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து காரில் வைத்தே அம்மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு, அம்மாணவியை ஓடும் காரிலிருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியை குலுக்கிய நிலையில் மீண்டும் அதுபோன்ற தொரு சம்பவம் அரங்கேறியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.துபோன்ற குற்றங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு தனிகவனம் எடுத்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

பதிவு செய்தவர் Ameer on 3:55 PM. தலைப்பு , , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added