|

மோடியின் அரசியல் நாடகம்.

குஜராத் அரசு 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்க்கலவரத்தில் ஆயுள் தண்டனை அளிக்கட்பட்ட மாயா கோட்னானி,பாபு பஜ்ரங்கி  உட்பட 10  பேரின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க போவதாக அரசு வழக்கறிஞர் கௌரங்க் வியாஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி தன் மேலே உள்ள மதச் சாயத்தை மறைக்க தனது சகாக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார்.தனது இமேஜ் இதன் மூலம் பெரியதாகவேண்டும் என்று எண்ணி வேஷம் போடும் மோடியை பற்றி பாமர மக்களும் அறிவார்கள்.இவர் இத்தனை வருடங்கள் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ன? கலவரத்தில் அப்பாவி மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வார்த்தையால் சொல்ல முடியாத கொடுமைகளால் கொன்றவர்களுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்தாரே!. தெகல்ஹாவில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் நாடே அவர்களை தண்டிக்க கோரியபோதும் எங்கே போய் இருந்தார் இந்த நீதிமான் மோடி?. மாறாக மாயா கோட்னானிக்கு MLA ,அமைச்சர் பதவியும், மதன் சாவலுக்கும் ,ஹரீஸ் பட்டுக்கும் குற்றவாளிகள் என்று தெரிந்த பின்னர்தானே MLA பதவி கொடுத்தார்.ஆனால் இன்று தன் முன்னேற்றத்துக்கு தடை என்று தெரிந்ததும் அவர்களை பலி  கொடுக்க துணிந்துவிட்டார். 
ஊடங்களின் உதவியுடனும் காங்கிரஸ் அரசுக்குள்ள எதிர்ப்புணர்வையும்  பயன்படுத்தி எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார் மோ(கே)டி. ஆனால் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மதசார்பற்ற கட்சிகளும் அவரின் கனவை தகர்க்க வேண்டும். இவர்களை எல்லாம் விட கலவரத்தில் மூன்று நாட்கள்  அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க முக்கிய காரணகர்த்தவே இந்த மோடிதான்.முதலில் தண்டிக்க பட  வேண்டியதும் அவர்தான்.தூக்கிலிடப்பட வேண்டியவரும் இவரே.

பதிவு செய்தவர் Ameer on 8:14 AM. தலைப்பு , , , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added