தங்க குணம் படைத்தவன் - ஸூகர் சர்னயெவ்

2011 ஆம் ஆண்டு மே மாதம்  காம்பிரிட்ஜ் நகரத்தின் சார்பாக தனது உயர் கல்விக்காக 2500 டாலர் ஊக்கத்தொகையாக பெற்ற 19 வயதே நிறைந்த இந்த மாணவனை தீவிரவாத குற்றம் சாட்டி கைது செய்திருக்கிறது போஸ்டன் காவல் துறை. இந்த மாணவனின் பெயர் ஸூகர் சர்னயெவ்.

போஸ்டன் குண்டுவெடிப்பை தொடர்ந்து கண்காணிப்பு காமெராவில் பதிவு செய்யப்பட்ட தரம் குறைந்த புகைப்படங்கள்  வெளியானதும் ரஷ்யாவின் செச்ன்யா பகுதியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகள் (ஸூகர் சர்னயெவ் மற்றும் அவரது மூத்த சகோதரர் டாமர்லென்) அமெரிக்க அரசால்  தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.  இதில் சர்னயெவின் மூத்த சகோதரர் தேடுதல் வேட்டையில் நடத்த துப்பாக்கிச் சண்டையில்(?) போலீசாரால் சுட்டுக் கொல்லபட்டார்.

தற்பொழுது போலீசார் கைது செய்த 19 வயதே நிரம்பிய ஸூகர்  சர்னயெவ் குறித்த  வதந்திகள் ஊடகங்களில் வந்ததும் இவரை அறிந்தவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இவரது தந்தை அன்ஸூர் இவரை குறித்து ”தி அசோசியேட் பிரஸ்” (The Associated Press) க்கு தொலைபேசி மூலம் கூறுகையில் "எனது மகன்  இரண்டாம் வருட மருத்துவ மாணவன், அவன் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவன், அவனை இந்த விடுமுறைக்கு எங்களை காண வருவான் என்று எதிர் பார்த்தோம் " என்று கூறினார்

மேலும் தன்  மகன்கள் அப்பாவிகள் என்றும் அரசு அவர்களை திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளாக்கி உள்ளது என்று கூறினார். தனது மூத்த மகனை போலீசார் கொன்று விட்டனர் தன் மற்றொரு மகனையும் போலீசார் கொலை செய்து விட்டால் இது திட்டமிட்ட சதியே என்று உறுதியாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களை குறித்து இவர்களின் தாயார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "எனது மகன்கள் இருவரும் நிரபராதிகள், அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்றும் இது ஒரு சதி என்றும் கூறினார். மேலும் FBI  அதிகாரிகள் தனது மகனை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஒரு ரஷ்ய சமூக வலை தளத்தில் உள்ள ஸூகரின் பக்கத்தில் அவர் கேம்பிரிஜ் ரின்டே மற்றும் லத்தின் பள்ளியில் பயின்று 2011 இல் தேர்ச்சி பெற்றதாக குறிபிடப்பட்டுள்ளது. அதே வருடம் தனது மேல்படிப்பிற்க்காக அவர் 2500 டாலர் ஊக்கத்தொகையும்  பெற்றுள்ளார். அந்த சமூக வலை தள பக்கத்தில் அவர் செச்ன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய  மொழி பேசுபவர் என்றும், தனது மீதான உலகத்தின் பார்வைக்கு இஸ்லாம் தான் காரணம் (இது தான் தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் இவரை தீவிரவாதி ஆக்கியதன் முதன்மை காரணம்) என்றும், தனது தனிப்பட்ட இலக்கு தொழில் மற்றும் பணம் என்றும் குறிபிட்டுள்ளார்.


போஸ்டன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின் ஸூகர் சர்னயெவ் தனது @J_ tsar என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் "Ain't no love in the heart of the city, stay safe people" (நகரத்தின் இதயத்தில் அன்பு இல்லை, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்) என்று பதிந்துள்ளார். உலக வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தீவிரவாதி(?) இவராகத்தான் இருக்க முடியும்.


இவரை போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று அறிந்ததும் அவரை அறிந்த பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 
அந்த வானொலி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய ஸூகர் இன் சமூகவியல் ஆசிரியர் ஸூகர் பற்றி கூறும்பொழுது "தங்க குணம் படைத்தவன் என்றும் அவன் மொத்தமாகவே ஒரு சிறந்த சிறுவன் " என்று கூறியுள்ளார். ஸூகர் இன் மூத்த சகோதரர் டாமர்லென் குத்து சண்டை வீராவார். இவரை குறித்து வேறொரு நாடு விசாரணைக்காக கோரிக்கை விடுத்ததை அடுத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் FBI  விசாரணை செய்தது என்று கூறியுள்ளார். இந்த விசாரணையில் டாமர்லென்  இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுபவராகவும், ஐவேளை சரியாக தொழுபராகவும் 2010இல் இருந்து அவரது போக்கில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து விசாரணைக்கு கோரிய நாட்டிற்கு செல்ல முற்பட்டதால் இந்த விசாரணையை அந்நாடு கோரியதாகவும் FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இவரை விசாரிக்க கோரிய நாடு (இஸ்ரேல்?)

இவர் ஒரு அமெரிக்க  பெண்ணை திருமணம் முடித்து இவர்களுக்கு மூன்று வயது மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிட தக்கது. இந்த குண்டு வெடிப்பே அரசாங்கம் நடத்தியதுதான் என்று பலர் நம்பி வரும் வேளையில், ஸூகர் சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்தார்கள் என்பதையும் தவிர வேறு எந்த ஒரு சிறு ஆதாரத்தையும் அதிகாரிகள் முன் வைக்க வில்லை. ஆனால் பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் இவர்கள் முஸ்லீம்கள் என்று கூறி வருவது அமெரிக்காவில் நிலவி வரும் முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி மூலம் இவர்களை குற்றவாளிகள் ஆக்கவும் மேலும் முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை அதிக படுத்துவதற்க்குமே ஆகும். இந்திய பத்திரிக்கைகளும் இவர்களின் கைது நடவடிக்கையை ஒரு கேலிக்குரிய செய்தியாக்கி வருகின்றன.
இனி இவர்களுக்காக ஏற்கனவே ஜோடித்து வைக்கப்பட்ட கதைகளை அதிகாரிகள் பத்திரிகைகள் வாயிலாக மக்களின் மழுங்கிய மூலையில் ஏற்றி இவர்களை குற்றவாளிகள் ஆக்கிவிடுவார்கள்.
மூன்று பேர் பறிபோன இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் வேட்டை, துப்பாக்கிசூடு, கைது என்று நாடகமாக ஆக்கி மறுபுறம் இதனை தொடர்ந்து 70 பேரை பலி கொண்ட Texas  மாகாண உர தொழிற்சாலை வெடிப்பை மறைகின்றனரோ என்ற சந்தேகமும் உள்ளது. நாளை அதனை நடத்தியவர்களும் இவர்கள் தான் என்று புது கதைகளும் வரலாம்.

செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இஸ்ரேல்
கடைசி புதுபிப்பு : 14:38

9:59 AM | தலைப்பு: , , | Read More »

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” - Westboro Baptist Church


அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்காக அமெரிக்க மக்கள் அனைவரும் வருந்தி வரும் வேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஓரின சேர்க்கை திருமணத்தை கண்டித்து கடவுள் அனுப்பிய தண்டனை என்று  வெஸ்ட் போரோ பாப்டிஸ்ட் சர்ச் (Westboro Baptist Church) கூறியுள்ளதாக வாஷிங்டன் டைம்ஸ்  (Washington Times) பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” என்று அந்த சர்ச்சின் டிவிட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தை தடுப்போம் என்றும் அந்த சர்ச் மிரட்டியுள்ளது.

அமெரிக்க அரசு இந்த குண்டு வெடிப்பினை தீவிரவாத செயல் என்று அறிவித்த பொழுதும் இதற்கு காரணமானவர்கள் உள்நாட்டுத் தீவிரவாதிகளா இல்லை வெளிநாட்டுத் தீவிரவாதிகளா என்று உறுதியாக கூறவில்லை.

வெஸ்ட் போரோ சர்ச் கூறுகையில், "இந்த குண்டுகளை கடவுள் அனுப்பினார், நீங்கள் நாட்டை அழிவிற்கு எடுத்துச் செல்ல கூடிய ஓரின  திருமணத்தை ஆதரிப்பதனால் உங்கள் நாட்டு மக்களை இன்னும் எத்தனை வழிகளில் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைகின்றீர்கள்" என்று கூறியுள்ளது.

 ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) பத்திரிக்கை இதனைக் குறித்து கூறிகையில், வெஸ்ட் போரோ சர்சினால் போஸ்டனில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த சர்ச் இணைய தள ஹாக்கர்  குழுமமான அனானிமஸ் கோபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

“If WBC protests the Boston funerals, they will have to expect us” என்று அனானிமஸ் தனது டிவிட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளது.



12:52 PM | தலைப்பு: , , | Read More »

அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் குண்டு வெடிப்பு



அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் இன்று நடைபெற்ற மராத்தான் போட்டியில்  முடிவு  கோட்டுக்கு அருகில் சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 8 வயது  சிறுவன் உட்பட  3
பேர் கொல்லப்பட்டனர். 50கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



சுமார் 23000 பேர் பங்கேற்ற இந்த மராத்தான் போட்டி முடிவுறும் சமயத்தில் (2:50p.m) முடிவு கோட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு குப்பை தொட்டியில் முதல் குண்டு வெடித்தது. அதன் பின் 13 வினாடிகள் கழித்து இரண்டாவது குண்டும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து  மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கை கால் துண்டானது.



இது குறித்து  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், "இந்த சம்பவத்தின் ஆழம் வரை செல்வோம். இதனை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்று நாம் கண்டறிவோம். இதற்கு காரணமான தனி நபரோ அல்லது குழுமமோ நீதியின் முழு அழுத்தத்தைப் பெரும்" என்று கூறினார்.



மேலும் இந்த சம்பவத்தை தீவிரவாத செயல் என்று ஒபமா கூறவில்லை. (வழக்கமாக இஸ்லாமியர்களை பலி கூறவே தீவிரவாதம் என்ற சொல் பயன் படுத்தப்படும்). மக்கள் எந்த ஒரு அவசர முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



ஆனால் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறிகையில் "இது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்தின் செயல் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இது தீவிரவாதத்தின் செயலாகவே கருதப்படும். எனினும் இதுவரை இதனை செய்தவர் யார் என்று இன்னும் அறியப்பட வில்லை. முழு விசாரணையின் பின் இதனை செய்தவர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தீவிரவாத குழுக்களா என்று கண்டறிய படும்" என்று தெரிவித்தார்.



சம்பவ இடத்தில் வெடித்த இரண்டு குண்டுகள் போக மேலும் மூன்று குண்டுகள் கண்டறியப் பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுவரை இதனை செய்தவர் யார் என்று கண்டறியப்படாதா நிலையில் போலீசார் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சவூதி அரேபிய குடிமகன் ஒருவரிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். இவர் மற்றவர்களை போல் போட்டியை காண வந்தவரா இல்லை இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தம் உடையவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.



ஒரு சில அதிகாரிகள் இதனை அமெரிக்க அரசு எதிர்ப்பு குழுக்களின் செயலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15 வரிகளை செலுத்துவதற்கான கடைசி தினமாகும். மேலும் ஏப்ரல் 19, 1995 ஓக்லகாமா(Oklahoma) நகரில் உள்ள அல்ஃ ப்ரெட் (Alfred P. Murrah Federal) என்ற அரசாங்க கட்டிட குண்டு வெடிப்பின் நினைவு நாள் ஆகும்.



செய்திகள் இவ்வாறு இருக்க 2 நாட்களுக்கு (April 13) முன்னரே போஸ்டன்(Boston) குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகநூல் (Facebook) பக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.


அதில் "Thoughts Go Out To All Involved In The Boston Explosions" என்று குறிப்பிட பட்டுள்ளது. இந்த பக்கத்தை உருவாக்கியவர் யார்? எப்படி இவர்களுக்கு குண்டு வெடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தெரியும்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை  கிளப்பி உள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் ஒருவர் இது குறித்து கேள்வி  எழுப்பியதும் இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டது. அதற்கான வீடியோ பதிவு இங்கே
இந்த செய்தியினை https://worldtruth.org என்ற தளம் வெளியிட்டுள்ளது.



இன்னும் பத்திரிகைகளால் வெளியிடப்படாத செய்தி என்னவெனில், போஸ்டன் குலோப் (Boston Globe) என்ற செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் (Twitter) தளத்தில் இன்று இந்த குண்டுவெடிப்பு நடந்த பாய்ல்ஸ்டன் (Boylston) தெருவில் உழல நூலகத்தின் எதிரே போஸ்டன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்தும் கட்டு படுத்தப்பட்ட வெடிப்பு நிகழ்வு நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.



அதுபோல் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில்" அங்கு ஏற்கனவே குண்டுகளை கண்டறியும் நாய்கள் பல குவிக்கபட்டிருந்தது" என்று கூறினர்.



மேலும் இந்த மராத்தான்  ஓட்டத்தில் பங்கேற்ற அலக்டைர்  ஸ்டீவென்சன் (Alastair Stevenson) என்பவர் கூறுகையில், அங்குள்ள போலீசார் இது ஒரு சோதனை பயிற்சி என்று ஒலிபெருக்கி மூலம் மீண்டும் மீண்டும் கூறியதாகவும், வீரர்கள் யாரும் பங்கேற்க  வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறிகிறார்.


எது எப்படியோ! இனி அமெரிக்கா யார் மேலாவது பலி போட்டு தனது அட்டூழியத்தை செய்யதொடங்கும்.

4:57 PM | தலைப்பு: , , | Read More »

இஸ்ரேலிய உளவாளிகளை அம்பல படுத்திய ஹாக்கர்கள்

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் இஸ்ரேலை வலை தளத்திலிருந்து துடைத்து எறியப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதில் இஸ்ரேலியர்களின் பல்லாயிரக் கணக்கான முகநூல் பக்கங்கள், டிவீட்டர் பக்கங்கள், பல வங்கிகளின் வலை தளங்கள், வெளியுறவு துறை இணையதளம், ஜெருஸலம் வங்கி இணையதளம்,இஸ்ரேல் பாதுகாப்பு துறை இணைய தொடர்பு, இஸ்ரேலிய பிரமரின் அதிகாரபூர்வ இணையதளம் இன்னும் மொசாத் உளவு பிரிவுன் இணையதளம் (ஹாக்) முடக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த பல தகவல்களை அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் வெளியிட்டது.

இந்த ( ஹாக்) இணையதள முடக்க நடவடிக்கை மூலம் 123 இஸ்ரேலிய உளவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று காசாவின் ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனை எகிப்தின் அல் ஸாப் அல் மஸ்ரி என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த 123 உளவாளிகளில் 48 எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் பங்கு சந்தை வர்த்தகத்திலும், 52 பேர் எகிப்தின் மத்திய தொலைகாட்சி மையம் உள்ள  கட்டிடத்திலும், 15 பேர் லிபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணறுகளிலும், 10 பேர் எகிப்தின் தொலை தொடர்பு வட்டத்திலும், 3 பேர் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களின் பெயர்கள் விரைவில் எகிப்தின் உளவு பிரிவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்மையான உளவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலின் உளவாளிகளை போல முயற்சியினை இஸ்ரேலிய அரசாங்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

1:37 PM | தலைப்பு: , | Read More »

சவுதியில் பெண்களின் தனி நகரம்...!


ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர்.
இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.
செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.
இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
அதே போல பெண்கள் மட்டுமே பணியாற்றும் தனி தொழிற்சாலைகளைக் கட்டவும் செளதி திட்டமிட்டுள்ளது.
இதற்காக செளதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹபுப் நகரத்துக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை அந் நாட்டு அரசு வழங்கவுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சுமார் 5,000 பெண்கள் பணியாற்றும் ஜவுளி ஆலைகள், மருந்துத் தயாரிப்பு ஆலைகள், உணவுப் பதப்படுத்தல் ஆலைகளை இந்த நகராட்சி கட்டவுள்ளது.
கடந்த ஆண்டு செளதியின் பெண்கள் உள்ளாடை விற்பனை நிலையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே போல அழகுப் பொருட்கள் விற்பனை மையங்களிலும் பெண்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் முதலாக செளதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு முதல் செளதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களும் வாக்களிக்கலாம் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

11:52 PM | தலைப்பு: , , | Read More »

ஏர் கேரளா...


வளைகுடா நாடான மஸ்கட்டில் கேரளா முஸ்லிம் கலாசாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா எம்பி இ.டி. முஹமது பஷீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-வளைகுடா நாடுகளில் கேரளாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்த்துவருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு இந்தியர்கள் விமானம் மூலம் கேரளாவுக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கிய விசேச காலங்களில் கேராளாவுக்கு வருவதற்கான பயணசீட்டு வாங்க அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. 


அவர்களின் சிரமத்தை குறைக்க கேரளாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே "ஏர் கேரளா" என்னும் அரசின் சொந்த விமானப்போக்குவரத்து தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு "ஏர் கேரளா"என்னும் பெயர் நான்கு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது. 
பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட கொச்சி விமான நிலையத்தை போல் இந்த "ஏர் கேரளா" விமானப போக்குவரத்தும் இயங்கும். இந்த போக்குவரத்து தொடங்குவது குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டியை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
"ஏர் கேரளா" விமானப் போக்குவரத்து தொடங்குவதில் பொருளாதாரப் பிரச்னை ஏதும் இல்லை. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான கூட்டத்தில் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

12:33 PM | தலைப்பு: , , , | Read More »

மியான்மரில் தொடரும் துயரம்.....மௌனம் சாதிக்கும் உலக நாடுகள்..........???









12:37 AM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added