கர்நாடகா தேர்தல் முடிவும் SDPI யின் அரசியல் அங்கீகாரமும்:


                              நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது SDPI கட்சியின் வளர்ச்சி மறுக்க முடியாத அளவில் உள்ளது.மக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து  உள்ள செல்வாக்கு கட்சியின் பாராபட்சமற்ற சமுதாய பணிகளே காரணம் ஆகும்.அதனால்தான் இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் யாரும் எதிர்பாராத அளவு வெற்றியடைய முடிந்தது.போட்டி இட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னணி கட்சிகளைவிடவும் அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.முக்கியமாக சில வாக்குகள் வித்யாசத்தில்  இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.முதன் முதலில்  இதுபோன்ற  ஒரு அங்கீகாரம் கிடைத்தது  கட்சியின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.மதவாத கொள்கையை மையமாக வைத்து அரசியல் நடத்திய பிஜேபி அரசை மக்களே ஒதுக்கிவிட்டனர்.அதன் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவி உள்ளனர்.மோடியை முன்னிறித்தி செய்த பிரச்சாரங்கள் மோடியை மக்கள் வெறுப்பதை காட்டுகிறது.தேர்தலை தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொள்ள பிஜேபி அலுவலகத்தில் குண்டுவெடிப்பை நடத்தி அதை அப்பாவி முஸ்லீம்கள் மேல் சுமத்தியும், தமிழ்நாட்டை சேர்ந்த சில அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் கைது செய்தும்,கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டு  இருந்த PFI (popular front of india) உறுப்பினர்களை  ஆயுதபயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று கைதுசெய்ததும் அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் மட்ட அரசியலை காட்டுகிறது.இதன் மூலம் SDPI கட்சிக்கு மக்களிடம் அவப்பெயரை உண்டாக்கவும்,கரநாடகாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களின் வாக்குகளை பிரிக்கவும் சதி செய்தனர்.ஆனால் இறைவன் அவர்களின் சதிகளை முறித்து அவர்களை தோல்வி அடைய  செய்தான்.மதவாத சக்திகள் வட இந்தியாவை போல தென் இந்தியாவையும் மாற்ற வேண்டும் என்ற திட்டம் தோல்வி தழுவியது.     பிஜேபி மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பே மக்கள் காங்கிரஸ் அரசை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தது.காங்கிரஸ் அரசு மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் இந்த மதவாதிகளின்,இந்துத்துவ அரசியலையும் ஒழிக்க முன் வர வேண்டும்.குற்றங்கள் சரியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.அப்பாவி முஸ்லீம்களை கைது  செய்தவர்களை விடுவிக்க வேண்டும்.இல்லையென்றால் காங்கிரஸ் வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். கர்நாடக போலீஸ் தமிழ்நாட்டில் புகுந்து அப்பாவிகளை கைது செய்ய அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும் தன் போக்கை மாற்ற வேண்டும்.அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஒன்றாகி விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொன்னதும் உடனே நிறைவேற்றிய அரசு இந்த விசயத்தில் பல போராட்டங்கள் நடந்த பின்னும் அமைதி காப்பது அழகல்ல.கோவையில் மீண்டும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் சில சம்பவங்கள் நடைபெறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.ஆனால் மரக்காணத்தில் உடனடியாக குற்றவாளிகளை சிறையில் அடைத்தது.இந்த நீதி முஸ்லீம்களுக்கும் கிடைக்க வேண்டும். SDPI கட்சியின் தாரக மந்திரம் சம உரிமை,சமநீதி,சம பாதுகாப்பு..அரசியல் லாபம் இல்லை.மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கட்சி இல்லை..அனைத்து
மக்களால்,மக்களுக்காக,மக்களே களப்பணி  ஆற்றும் கட்சி.இனி வரும் காலங்களில் அரசியலில் முத்திரை பதிக்க இறைவன் அருள் புரிவானாக!


8:13 PM | தலைப்பு: , , , , | Read More »

முஸ்லிம்களுக்கு எதிராக விதைக்கப்படும் விஷமங்களும்;அளிக்கப்படும் அநீதியும்:


நண்பர்களே!மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளவும்  இந்த கட்டுரையை எழுதுகிறேன்.நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே கண்ணை மூடி கொண்டு முஸ்லீம்கள் மீது பழி  போட்டு அப்பாவி இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதி என்று பல வருடங்களாக சிறையில் அடைப்பதும்,உண்மையான குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரும் அவர்களை வெளியேவிடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்வதும்,வெளியே வந்தாலும் மீண்டும் மற்ற வழக்குகளில் கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. குண்டு வெடிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நாட்டின் மதச்சார்பின்மையும்,இறையாண்மையும்,நீதித்துறையும் சந்தேகம் அடைய வைக்கிறது.உதாரணமாக சில சம்பவங்களை தருகிறேன்.

1.சம்ஜவுதாரயில்குண்டுவெடிப்பு:
Feb 18 2007
68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் (குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

2.மாலேகான் குண்டுவெடிப்பு-1:
Sep 8 2006
37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்

3.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:

May 18 2007
14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா

4.அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

5.அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:
Oct 11 2007
3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

6.மாலேகான் குண்டுவெடிப்பு-2:

Sep 29 2008
7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

7.தானே சினிமா குண்டுவெடிப்பு:

Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

8.கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி. பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

9.கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தை
த் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர்காயமடைந்தனர்.இதி்ல் குற்றம் சாட்டப்பட்ட சித்திக் குற்றம் நிருபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை..

                                        

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..

                                    

இவர்களின் நோக்கம் எல்லாம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களின் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதே.இவர்களின் இந்த செயல்களை அரசும் கண்டும் காணமல் இருப்பதுதான் வேதனை..இவர்கள் எல்லாம் வெளியே உல்லாசமாக உலவி கொண்டு இருக்கும்போது நாட்டில் இன்னும் பல குண்டு வெடிப்புகள் நிகழத்தான் செய்யும்.இவர்களையும்.அந்த அமைப்புகளையும்  அரசு தண்டிக்கும்போது நாட்டில் அமைதி நிலவும்...அன்றுதான் நாம் அனைவரும் பெருமைப்பட முடியும் இந்தியா ஒரு மதச்  சார்பற்ற நாடு என்று..

3:09 PM | தலைப்பு: , , , | Read More »

குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடியா காரணம்?

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.
மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.
குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.
அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.


மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.
தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.


அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.
2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன?


மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.
குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.


தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.
ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.


இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.
அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.


செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
---மேலும் மோடியை ஆதரிக்க அவர் ஒரு நடுநிலைவாதி அல்ல.குஜராத் வழககுகளில் அவர் பெயர் இன்னும் உள்ளதும் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம்.காங்கிரஸ்,பிஜேபி தவிர மூன்றாவது அணியில் ஒருவர் பிரதமர் ஆனால்தான் இந்தியா ஒளிரும்..இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்பது என் அபிப்ராயம் ....

1:12 PM | தலைப்பு: , , , , | Read More »

டில்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நியாயம் வேண்டி வலுக்கிறது போராட்டம்

டில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமி மீட்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கடந்த வெள்ளியன்று டில்லி எய்ம்ஸ்(AIIMS)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி பேச்சுமூச்சற்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.K.சர்மா தெரிவித்தார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளி மனோஜ்குமார் பீஹாரின் முஜப்பர்பூர் என்ற கிராமத்தில் ஒளிந்திருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டான். அவனுக்கு வயது 22.

பாலியல் பயங்கரவாதி மனோஜ்குமார்
டில்லி காந்திநகரில் உள்ள, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வசித்து வருகிற அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் குடியிருந்த குற்றவாளி மனோஜ், சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி தன் வீட்டிலேயே இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இன்றி அடைத்து வைத்திருந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமி இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தேடிவந்த அவளின் குடும்பத்தினர் புதன் கிழமையன்று சிறுமியையை மீட்டனர்.

மனோஜ்குமார் கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, மூன்று நாளைக்குள் டில்லி காவல்துறையின் வசம் குற்றவாளி ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் 200மி.லி ஹேர் ஆயில் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகள் ஆகியவை சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சிறுமிக்கு இழைந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியும் போரட்டகாரர்களும் பொதுமக்களும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முன்பாகவும் டில்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் போரட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

7:30 PM | தலைப்பு: , , , , , | Read More »

உணவும் ஆரோக்கியமும்


இறைவனின் படைப்பினங்களில் மிகவும் உன்னதமான படைப்பு மனிதஇனம்;. இவ்வினம் உலகில் உயிர்வாழ மிக  முக்கியமானது உணவு. நம்மில் பலர் அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை. பார்ப்பதை எல்லாம் பருகவேண்டும் கிடைப்பதை எல்லாம் உண்ண வேண்டும் என்ற ஆசையில் வாழும் மனிதர்களைத்தான்  காணமுடிகிறது. ஆசைக்கு அளவில்லைதான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா?. பணத்தைக் கொடுத்து உணவை மட்டுமல்ல, நோயையும் அல்லவா விலைக்கு வாங்குகின்றனர். வயிறு புடைக்க உண்டு ஜீரணிக்கமுடியாமல் திண்டாடுபவர்களும் உண்டு. வாழ்வதற்காகத்தான் உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழ்க்கை அல்ல. 'நொறுங்க தின்றால்; நூறு வயது' என்ற முன்னோர்களின் கூற்றை  தவறாக புரிந்துகொண்டு எப்பொழுதும் நெறுக்குத்தீனிகளை திண்றுகொண்டிருக்கின்றனர். 'ஆதத்தின் மகன் வயிற்றை விட மோசமான ஒரு பாத்திரத்தை நிரப்புவதில்லை' என்பது நபிமொழி. பலநோய்கள் அதிகமாக உண்பதனாலேயே  ஏற்படுகிறது. உணவு விஷயத்தில் ஒருசில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் நாம்  ஆரோக்கியமாக வாழலாம்.

1.தேர்ந்தெடுத்தல்.

உடல் ஆரோக்கியத்திற்கு  நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்;. அல்லாஹ் தனது   திருமறையில் மனிதர்களே பூமியிலுள்ள பொருட்களில் அணுமதிக்கப்பட்டவற்றையும் பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஆல்குர்ஆன் (2:168) இப்போது பிரபலமடைந்து வரும் விரைவு உணவுகள் ஜகயளவ கழழனஸ நாவிற்கு சுவை தந்தாலும் நோயை வரவழைக்க கூடியவை. இதுபோன்ற உணவுகளை குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க வேண்டும்.

2.அளவுகோல்.

பசி ஏற்படக்கூடிய நேரத்தில் வயிற்றுக்கு எந்த அளவு உணவு தேவையோ அந்த  அளவு மட்டுமே உண்ண வேண்டும்.  நபி(ஸல்)அவர்களின் அறிவுரைப்படி வயிற்றின் நான்கில் இரு பகுதியை உணவிற்கும் ஒருபகுதி நீருக்கும் ஒருபகுதியை  வெற்றிடமாகவும் விட்டு விட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான உடலை நம்மால் பெறமுடியும்.

3.நேரம்.

நினைத்த நேரமெல்லாம் அல்லது கிடைத்த நேரமெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு  இருக்காமல் சாப்பிடுவதற்கு என்று நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் நீ விரும்பும் போதெல்லாம் உணவு உண்பது வீண்விரயமாகும்.(தப்ரானி) காலை உணவை தவிர்;த்தல் கூடாது. இரவு உணவை தாமதப்படுத்தவும் கூடாது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும்போது நம் உடலை தெம்போடும் நோய்கள் அண்டாமலும்  பாதுகாத்துக் கொள்ளலாம். இஸ்லாம் ஆரோக்கியம் பேணப்படுவதன் முக்கியத்தை வலியுறுத்திக் கூறுகிறது. நபி(ஸல்)அவர்கள், இவ்வுலகில் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளில் முக்கியமானவைகளாக குறிப்பிடும் போது ஆரோக்கியமும் ஓய்வும் என கூறினார்கள். மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவை உண்பதை பற்றி குறிப்பிடும் திருமறை குர்ஆன் அத்தோடு ஒரு விஷயத்தையும்         வலியுறுத்துகிறது.

உண்ணுங்கள் பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்;ஆன் 07 : 31)

இந்த வசனம் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமிய உம்மத்தின் ஒரு பகுதியினர் அளவு கடந்து உணவை உண்டு பெரும்பகுதி உணவை வீணடித்து  ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.மற்றொரு பகுதியினரோ உண்ண உணவின்றி பட்டினியின் காரணமாக ஆரோக்கியம் இழந்து நிற்கின்றனர்.இந்நிலை மாற்றப்படவேண்டும்.

இன்று நமது சமூகத்தில் விருந்து என்ற பெயரால் அனாச்சாரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏழைகள் புறக்கனிக்ப்பட்டு பணம்படைத்தோர் மட்டுமே விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவே மோசமான விருந்து என அண்ணலார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இன்று  நம் சமுதாய மக்கள் எத்தனையே பேர் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி கண்ணீருடன் வாழ்வதை காண்கிறோம்;;. அவர்கள் துயர் துடைத்து,  வாழ்வாதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்க என்ன முயற்சி எடுத்தோம் எப்படி செயலாற்றினோம் என்பற்கு இறைவனிடம் விடையளிக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவை உண்டு நம்முடைய ஆரோக்கியம் பேணும் அதேநேரம் முஸ்லிம் சமூகத்தில் பசியுடன் இருக்கும் தன் சகோதரனுக்கும் ஈன்றுதவி அவர்களின் ஆரோக்கியத்தையும் பேணும்போதுதான் சக்தியுள்ள ஒரு உம்மத் இந்த பூமியில் கட்டி எழுப்பப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.                

 ஆக்கம் - உம்மு அன்ஃபால்.

10:07 PM | தலைப்பு: , , , | Read More »

ஹிஜாப் - பெண்களின் வாழ்க்கை முறை

      ஹிஜாப் - பெண்களின் வாழ்க்கை முறை


அன்பான சகோதரிகளே! இன்றைய காலகட்டத்தில் சில சகோதரிகள் தங்கள் தலையை மட்டுமே மறைத்துக்கொண்டு ஹிஜாபுடன் இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் தலையை மறைப்பது மட்டும் தான் ஹிஜாப் என்பதல்ல. உண்மையில் சிந்தித்துப் பார்த்தோமானால் ஹிஜாப் என்பது நம் பேச்சின் வெளிப்பாடு, நம் நடையின் வெளிப்பாடு, நம்மை நாமே வழி நடத்திச் செல்லும் நெறிமுறை. ஹிஜாப் என்னும் வார்த்தை தன்னகத்தே ஒரு முறையான, முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டுள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

இன்னும், முஃமீனான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் (முஃமீனான பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம்புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது, மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்தி லிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம், மேலும் முஃமீன்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி)நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்;ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபைப் பற்றி இவ்வசனம் தெளிவுபடுத்தும் உண்மைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
தலையை மட்டும் மறைத்துக் கொண்டால் போதுமா?
இந்த வசனத்தை உற்று நோக்கும் போது தங்கள் முந்தானைகளை மேற்சட்டையின் மீது போட்டு கழுத்து, நெஞ்சு ஆகியவற்றையும் மறைக்க வேண்டும். அதாவது தலையை மறைக்கப் பயன்படுத்தும் துணியால் இந்த பாகங்களையும் மறைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். எனினும் சில பெண்கள் சிறிய துணியினால் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு ஏனைய பாகங்களான கழுத்து, நெஞ்சு பகுதியை மறைக்காமல் விட்டு விட்டு தாங்கள் முழுமையாக ஹிஜாபின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். இது அறியாமைக்கால பெண்களின் நடைமுறையாகும்;. இமாம் குர்துபி கூறியுள்ளார்கள். அக்கால பெண்கள் தலையை மறைக்க பயன்படுத்தும் துணியின் ஓரங்களை பின்னால் தொங்கும்படி விட்டுவிடுவர். இதனால் கழுத்து, நெஞ்சு, காது ஆகிய பகுதிகள் மறைக்கப்படாமல் இருக்கும். பின்னர் அல்லாஹ், தங்கள் முந்தானைகளால் இப்பகுதிகளை மறைக்க ஆணையிட்டான்.
இறுக்கமான உடைகள் அணியலாமா?
டைட் ஜீன்ஸும், சிறிய டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு தலையை மட்டும் ஒரு துணியால் மறைப்பதும் ஹிஜாப் ஆகாது. உடலமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அணியக்கூடாது. நபி (ஸல்) கூறினார்கள், 'என் உம்மத்தில் பெண்களிலிருந்து ஒரு சாரார் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று உயர்ந்து இருக்கும். அவர்கள் சுவனம் நுழையவே மாட்டார்கள், ஏன் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்'. (ஆதாரம்: முஸ்லிம்)
மெல்லிய ஆடைகளை அணியலாமா?
ஷிபான் போன்ற மெல்லிய துணி வகைகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் தோலின் நிறம் வெளியே தெரிகின்ற ஆடைகளை ஹிஜாபாக ஆக்க முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மெல்லிய உடை அன்பளிப்பாக கிடைத்தது, அதை ஒஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். அதை அவர் தன் மனைவிக்கு கொடுத்து விட்டார்;. நபி (ஸல்) அவரிடம் இதைப்பற்றி கேட்ட போது தம் மனைவிக்கு கொடுத்ததை தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர் அதை அணியும் போது மேலே வேறு ஒரு ஆடையும் சேர்த்து அணியட்டும். ஏனெனில் அவ்வுடை அவரின் எலும்புகளின் அளவை விவரிக்கும் விதமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.
ஹிஜாப் பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கலாமா?
ஆடையானது பிற ஆடவரின் கவனத்தைக் கவரும் விதமாக இருக்கக்கூடாது. 'அல்லாஹ் தன் திருமறையில் அழகை வெளிப்படுத்தக் கூடாது' என தெளிவாகக் கூறுகிறான். இருந்தும் சில சகோதரிகள் ஹிஜாப் அணிகிறோம் என்ற பெயரில் அலங்கரிக்கப்பட்ட ஹிஜாபை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். ஜொலிக்கும் கற்கள் பதிக்கப்பட்டும், ஜரிகை வேலை செய்யப்பட்டும் உள்ள இந்த ஹிஜாப், சாதாரண ஆடைகளில் அவர்கள் இருப்பதைவிட கூடுதல் அழகை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் ஆண்களின் பார்வை அவர்களை நோக்கி செல்கிறது. இதனால் ஹிஜாபின் முக்கிய அம்சமே அடிபட்டு விடுகிறது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கிவிடுங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள். மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களைவிட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான். (அல்குர்ஆன் - சூரத்துல் அஹ்ஜாப் 33:33)
அழகு அலங்காரமும், வாசனைத் திரவியங்களும்
அலங்காரம் செய்து கொண்டு வெளியே செல்வதும் அழகை வெளிக்காட்டும் விஷயமே! தலையையும் உடலையும் மறைத்துக் கொண்டு உதட்டுச்சாயம், கண்மை போன்றவைகளை பூசிக் கொண்டு போவதும் ஹிஜாபில் சேராது. மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பதும் ஆகுமானதல்ல. ஆனால் வாசனைத் திரவியங்கள் கணவனுடன் மட்டும் இருக்கக்கூடிய நேரங்களில் உபயோகிக்கலாம்;;.
மஸ்ஜிதுகளுக்கு போகும்போது பெண்கள் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் நபி (ஸல்) யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரி ஆவாள்''என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூ மூஸா (ரலி), ஆதாரம்: அஹ்மது)
சலங்கை மற்றும் மணியோசையுடன் கூடிய நகைகள்
நம்மவரிடையே கொலுசு அணிவது வழக்கம். அதில் வருகின்ற ஓசை அடுத்தவரைக் கவரும், இது தவறு என்று அவர்கள் உணர்வதில்லை. சத்தம் வருகின்ற எந்த விஷயமானாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நவீன நாகரீக உலகில் செருப்பு, கைச்செயின், கைப்பை, கிளிப் இன்னும் உடைகளிலும் சத்தம் வரும் மணிகள் வைக்கப்படுகின்றன. இவை ஹிஜாபின் ஒழுங்குகளுக்கு எதிரானது. இதையே அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது,
மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.. (அல்குர்ஆன் - சூரத்துந்நூர் 24:31)
ஹிஜாபில் இருந்துக் கொண்டு மஹரமல்லாதவரிடம் பேசி சிரித்தல்
சில சகோதரிகள் ஹிஜாபுடன் இருந்து கொண்டு அந்நிய ஆண்களிடம் பேசி சிரிப்பதால்; தவறில்லை என்று நினைக்கின்றனர்;;. ஆனால் அவ்வாறில்லை. நீங்கள் பேசக் கூடிய ஆண் ஒரு ஆலிமாக இருந்தாலும்கூட பேச்சில் நளினம் காட்ட வேண்டாம். அல்லாஹ் திருமறையில் கூறுவதை கவனியுங்கள்:
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல, நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான், இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (சூரத்துல் அஹ்ஜாப் - 33:32)

முக்கியமான தேவைக்காக அன்றி அந்நிய ஆடவரிடம் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நளினம் கூடாது என்பதால் கடின சித்தமாக பேசலாம் என்பதல்ல. மாறாக சாந்தமாக அதே நேரம் உறுதியான வாக்குகளைக் கொண்டு பேசவேண்டும்.
ஹிஜாப் அணிந்து கொண்டு அந்நிய ஆடவரை பார்த்தலும் ஹிஜாப் அல்ல
அல்லாஹ் உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். ஏனெனில், ஒரு பார்வை ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் அர்த்தம் மிக்கவை. எனவே இஸ்லாமிய முறைப்படி முழுமையாக நாம் உடையணிந்திருந்தாலும், நமது பார்வைகளை தாழ்த்திக் கொள்வது கொண்டு நமது வெட்கத்தை பேணிக் கொள்ள வேண்டும். இதுவே குழப்பம் ஏற்படாமல் இருக்க வழிவகைச் செய்யும்.
இன்டெர்நெட் மற்றும் தொலைபேசிகளில் உரையாடுவது
மஹரம் அல்லாதவரிடம் உரையாடிக் கொண்டு, 'நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அது இன்டர்நெட் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ இருந்தபோதிலும், இவ்வாறான தொடர்புகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழி வகுத்துவிடும். எத்தனையோ குடும்பங்கள் வாழ்விழந்ததற்கும், எத்தனையோ இளம் வயது பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கும் இவைகள் காரணங்களாக அமைந்திருக்கின்றன. எனவே தான் இஸ்லாம் சொல்கிறது ஹராமுக்கு வழிவகுக்கும் அல்லது துணைபோகும் அனைத்து விஷயங்களும் ஹராமே. அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (;சூரத்துல் அஃராஃப் - 7:32)
நடையில் கவனம்
பெண்கள் பேஷன் ஷோக்களில் ஒய்யாரமாக நடை நடந்து ஆண்களை கவர்வது போன்ற நடைகளை நடக்கக் கூடாது. கண்ணியமான முறையில் ஒழுக்கத்துடன் இருப்பது தான் மரியாதை. நபி (ஸல்) 'காலை தட்டி நடக்கும் பெண்கள் நரகத்திற்குரியவர்கள்' என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது
மஹரமல்லாதவர்களுடன் கை குலுக்குவது ஆகுமானதல்ல என்பதும் ஹிஜாபின் ஒரு அம்சமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உங்களுக்கு அனுமதி இல்லாத பெண்களை தொடுவதைவிட தலையில் இரும்பு ஆணியைக் கொண்டு அடித்தல் சிறந்தது'. (ஆதாரம்: தப்ரானி)
ஆண்கள் பகுதியை தவிர்த்தல்
சில சமயங்கள் பெண்களில் சிலர் பள்ளிகளில் ஆண்கள் பகுதியின் வழியாக நுழைவர் அல்லது அந்த வழிகளில் தனியாக நின்று கொண்டிருப்பர். இது மற்ற ஆண்களுடன் கலந்து நிற்க வழி செய்துவிடும். எங்கும் எப்போதும் பெண்கள் நுழைவுப் பகுதியையே பயன்படுத்த வேண்டும். நபி (ஸல்) 'சாலைகளின் நடுவே நடப்பதற்கு உங்களுக்கு (பெண்களுக்கு )அனுமதியில்லை என்பதால் ஓரமாக செல்லுங்கள்' என்று கூறினார்கள்.(ஆதாரம்: அபூ தாவூது) அல்லாஹ்வின் வீட்டை வலம் வரும் போதும் அந்நிய ஆடவருடன் கலந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.
பிற சகோதரிகளின் அழகை மறைத்தல்
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை தன் கணவனிடமோ அல்லது சகோதரரிடமோ வர்ணிக்கக் கூடாது. சக பெண்ணின் அவயத்தை மறைத்தலும் ஹிஜாபின் அம்சமாகும். நபி (ஸல்) 'ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அழகை அவளைக் காண்பது போன்று வர்ணிக்கக் கூடாது'' என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த நிரந்தரமற்ற உலகில், பிறர் நம் அழகை ரசிக்க வேண்டும். நம் ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும் மெச்சலுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால், நாளை மறுமையில் இறைவன் முன் கை சேதப்பட்டவர்களாக நிற்போம். இந்நிலை நமக்கு வேண்டாம்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அவனது சத்திய மார்க்கத்தை விளங்கி நேரான பாதையில் செல்ல துணைபுரிந்து உன்னத சுவனத்தை நல்குவானாக! ஆமீன்!!!
(ஆக்கம்: சகோதரி அஸ்மா பின்த் ஷமீம்)
தமிழில் : உம்மு உபைத்
 

10:04 PM | தலைப்பு: , , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added