மோடியின் அரசியல் நாடகம்.

குஜராத் அரசு 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்க்கலவரத்தில் ஆயுள் தண்டனை அளிக்கட்பட்ட மாயா கோட்னானி,பாபு பஜ்ரங்கி  உட்பட 10  பேரின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க போவதாக அரசு வழக்கறிஞர் கௌரங்க் வியாஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி தன் மேலே உள்ள மதச் சாயத்தை மறைக்க தனது சகாக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார்.தனது இமேஜ் இதன் மூலம் பெரியதாகவேண்டும் என்று எண்ணி வேஷம் போடும் மோடியை பற்றி பாமர மக்களும் அறிவார்கள்.இவர் இத்தனை வருடங்கள் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என்ன? கலவரத்தில் அப்பாவி மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் வார்த்தையால் சொல்ல முடியாத கொடுமைகளால் கொன்றவர்களுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்தாரே!. தெகல்ஹாவில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் நாடே அவர்களை தண்டிக்க கோரியபோதும் எங்கே போய் இருந்தார் இந்த நீதிமான் மோடி?. மாறாக மாயா கோட்னானிக்கு MLA ,அமைச்சர் பதவியும், மதன் சாவலுக்கும் ,ஹரீஸ் பட்டுக்கும் குற்றவாளிகள் என்று தெரிந்த பின்னர்தானே MLA பதவி கொடுத்தார்.ஆனால் இன்று தன் முன்னேற்றத்துக்கு தடை என்று தெரிந்ததும் அவர்களை பலி  கொடுக்க துணிந்துவிட்டார். 
ஊடங்களின் உதவியுடனும் காங்கிரஸ் அரசுக்குள்ள எதிர்ப்புணர்வையும்  பயன்படுத்தி எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார் மோ(கே)டி. ஆனால் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மதசார்பற்ற கட்சிகளும் அவரின் கனவை தகர்க்க வேண்டும். இவர்களை எல்லாம் விட கலவரத்தில் மூன்று நாட்கள்  அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க முக்கிய காரணகர்த்தவே இந்த மோடிதான்.முதலில் தண்டிக்க பட  வேண்டியதும் அவர்தான்.தூக்கிலிடப்பட வேண்டியவரும் இவரே.

8:14 AM | தலைப்பு: , , , , , | Read More »

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்......


டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், டெல்லியில் இக்கொடுமை ஒரு தொடர் நிகழ்வாகவே உள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள அசோக் நகர் அருகே நேற்று காலை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்மாணவியை காரில் தூக்கிப் போட்டு அருகில் உள்ள சரோஜினி நகருக்கு கடத்திச் சென்றது. இந்த கும்பலில் ஒருவர் அம்மாணவியின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து காரில் வைத்தே அம்மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு, அம்மாணவியை ஓடும் காரிலிருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அம்மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் டெல்லியை குலுக்கிய நிலையில் மீண்டும் அதுபோன்ற தொரு சம்பவம் அரங்கேறியிருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.துபோன்ற குற்றங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடந்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு அரசு தனிகவனம் எடுத்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

3:55 PM | தலைப்பு: , , , , | Read More »

பெங்களூரில் (தேர்தல்) குண்டு வெடிப்பு!


பெங்களுரு: பெங்களூரில் பா.ஜா.க அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை 10:20 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட  KSRP போலீஸ் வாகனத்தில் இருந்த  8 போலீசார் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 2 கார்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. முதலில் இது பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திய ஆம்னி வேனின் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது இரண்டு கார்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி குண்டினால் ஏற்பட்டது என்று காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவுராத்கர் தெரிவித்துள்ளார்

இதற்க்கு முந்தைய குண்டுவெடிப்பு இதே தேதியில் IPL போட்டிக்கு முன்னதாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்தது. இதன் தொடர்பாக அப்துல் நாசர் மதானி எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
மூத்த காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்,  நீல நிற சுசுகி மோட்டார் சைக்கிளில் டைமர் வகையை சார்ந்த IED  குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது என்று  கூறினார். மேலும் அந்த சுசுகி பைக் முந்தைய இரவு அங்கு நிருத்தபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகின்றனர். இந்த வெடி குண்டு தாக்குதலின் விசாரணைக்கு பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்ட CCTV காமெரா உதவும்(?) என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி L.R. பாச்சாவ் கூறுகையில், தற்சமயம் குண்டு வெடிப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும், எந்த வகையான குண்டு வெடிக்க வைக்கப்பட்டது என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஜன்னல்களில் இருந்து நொறுங்கிய கண்ணாடி  துகள்களால் சூழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமையத்தில் KSRP வேனில் இருந்த தலைமை காவலர் வெங்கடேசையா ஹிந்து பத்திரிக்கையிடம்  கூறுகையில், வெடி குண்டின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாங்கள் பெரும் சப்தத்தை கேட்டோம். எங்களால் எதனையும் சரியாக காண முடியவில்லை. முற்றிலும் புகை மூட்டமாக இருந்தது. புகை விலகியதும் மக்கள் சாலையில் விழுந்து கிடந்ததை கண்டோம். அதில் பெரும்பாலானோர் புகை மற்றும் சிதறிய கண்ணாடி துண்டுகளால் காயமடைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக  பா.ஜ.க அலுவலகத்திற்கு அருகிலிருந்த போலீஸ் வேன் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று பா.ஜ.க தொண்டர்கள் புகார் கூறியதால்  வெடிப்பு நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. இடம் மாறிய சில நொடிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது  என்று கூறினார்.


இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை K.C. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடந்த தெரு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அசோக், கட்சி அலுவலகத்தையும் சம்பவ இடத்தையும் பார்வை இட்டார்.

இதனிடையில் இந்த குண்டு வெடிப்பை முன்னிறுத்தி அரசியல் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத், இந்த குண்டு வெடிப்பு பா.ஜ.க வின் தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்னும் பா.ஜ.க ஆதரவு செய்தி ஊடகங்கள் இந்த குண்டு வெடிப்பை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திருப்ப நேரடி மற்றும் மறைமுக உக்திகளை கையாண்டு வருகின்றனர். http://www.oneindia.in/ என்ற செய்தி தளம் பெங்களுர் குண்டு வெடிப்பு செய்திகளை வெளியிட்ட அனைத்து பக்கங்களிலும்அந்த செய்திக்கு கீழ் அப்துல் நாசர் மதானி குறித்த வீடியோ பதிவையிட்டு இருக்கின்றது. இது போன்ற செயல்கள் தொடர்பில்லாத நிகழ்வுகளை தொடர்
பு படுத்தி பார்க்க உறுதுணையாய் அமையும்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் பல அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு ஆதராமில்லாமல் விடுவிக்கப்பட்டு வரும் வேளையில் இது போன்ற செய்தி மக்களை திசைதிருப்பும் முகமாக அமையும். புதிய தேச வாசகர்கள் http://www.oneindia.in/ தளத்தின் இந்த செயலை கண்டித்து அந்த பதிவுகளை நீக்க கோரி மின்னஞ்சல் அனுப்பலாம்.

7:32 PM | தலைப்பு: , , , , | Read More »

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” - Westboro Baptist Church


அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்காக அமெரிக்க மக்கள் அனைவரும் வருந்தி வரும் வேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஓரின சேர்க்கை திருமணத்தை கண்டித்து கடவுள் அனுப்பிய தண்டனை என்று  வெஸ்ட் போரோ பாப்டிஸ்ட் சர்ச் (Westboro Baptist Church) கூறியுள்ளதாக வாஷிங்டன் டைம்ஸ்  (Washington Times) பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

“போஸ்டன் குண்டு வெடிப்பிற்காக இறைவனுக்கு நன்றி” என்று அந்த சர்ச்சின் டிவிட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தை தடுப்போம் என்றும் அந்த சர்ச் மிரட்டியுள்ளது.

அமெரிக்க அரசு இந்த குண்டு வெடிப்பினை தீவிரவாத செயல் என்று அறிவித்த பொழுதும் இதற்கு காரணமானவர்கள் உள்நாட்டுத் தீவிரவாதிகளா இல்லை வெளிநாட்டுத் தீவிரவாதிகளா என்று உறுதியாக கூறவில்லை.

வெஸ்ட் போரோ சர்ச் கூறுகையில், "இந்த குண்டுகளை கடவுள் அனுப்பினார், நீங்கள் நாட்டை அழிவிற்கு எடுத்துச் செல்ல கூடிய ஓரின  திருமணத்தை ஆதரிப்பதனால் உங்கள் நாட்டு மக்களை இன்னும் எத்தனை வழிகளில் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைகின்றீர்கள்" என்று கூறியுள்ளது.

 ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) பத்திரிக்கை இதனைக் குறித்து கூறிகையில், வெஸ்ட் போரோ சர்சினால் போஸ்டனில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த சர்ச் இணைய தள ஹாக்கர்  குழுமமான அனானிமஸ் கோபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.

“If WBC protests the Boston funerals, they will have to expect us” என்று அனானிமஸ் தனது டிவிட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளது.



12:52 PM | தலைப்பு: , , | Read More »

அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் குண்டு வெடிப்பு



அமெரிக்காவின் போஸ்டன் (Boston) நகரத்தில் இன்று நடைபெற்ற மராத்தான் போட்டியில்  முடிவு  கோட்டுக்கு அருகில் சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 8 வயது  சிறுவன் உட்பட  3
பேர் கொல்லப்பட்டனர். 50கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



சுமார் 23000 பேர் பங்கேற்ற இந்த மராத்தான் போட்டி முடிவுறும் சமயத்தில் (2:50p.m) முடிவு கோட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு குப்பை தொட்டியில் முதல் குண்டு வெடித்தது. அதன் பின் 13 வினாடிகள் கழித்து இரண்டாவது குண்டும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து  மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கை கால் துண்டானது.



இது குறித்து  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், "இந்த சம்பவத்தின் ஆழம் வரை செல்வோம். இதனை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்று நாம் கண்டறிவோம். இதற்கு காரணமான தனி நபரோ அல்லது குழுமமோ நீதியின் முழு அழுத்தத்தைப் பெரும்" என்று கூறினார்.



மேலும் இந்த சம்பவத்தை தீவிரவாத செயல் என்று ஒபமா கூறவில்லை. (வழக்கமாக இஸ்லாமியர்களை பலி கூறவே தீவிரவாதம் என்ற சொல் பயன் படுத்தப்படும்). மக்கள் எந்த ஒரு அவசர முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



ஆனால் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறிகையில் "இது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்தின் செயல் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இது தீவிரவாதத்தின் செயலாகவே கருதப்படும். எனினும் இதுவரை இதனை செய்தவர் யார் என்று இன்னும் அறியப்பட வில்லை. முழு விசாரணையின் பின் இதனை செய்தவர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தீவிரவாத குழுக்களா என்று கண்டறிய படும்" என்று தெரிவித்தார்.



சம்பவ இடத்தில் வெடித்த இரண்டு குண்டுகள் போக மேலும் மூன்று குண்டுகள் கண்டறியப் பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுவரை இதனை செய்தவர் யார் என்று கண்டறியப்படாதா நிலையில் போலீசார் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சவூதி அரேபிய குடிமகன் ஒருவரிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். இவர் மற்றவர்களை போல் போட்டியை காண வந்தவரா இல்லை இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தம் உடையவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.



ஒரு சில அதிகாரிகள் இதனை அமெரிக்க அரசு எதிர்ப்பு குழுக்களின் செயலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15 வரிகளை செலுத்துவதற்கான கடைசி தினமாகும். மேலும் ஏப்ரல் 19, 1995 ஓக்லகாமா(Oklahoma) நகரில் உள்ள அல்ஃ ப்ரெட் (Alfred P. Murrah Federal) என்ற அரசாங்க கட்டிட குண்டு வெடிப்பின் நினைவு நாள் ஆகும்.



செய்திகள் இவ்வாறு இருக்க 2 நாட்களுக்கு (April 13) முன்னரே போஸ்டன்(Boston) குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகநூல் (Facebook) பக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.


அதில் "Thoughts Go Out To All Involved In The Boston Explosions" என்று குறிப்பிட பட்டுள்ளது. இந்த பக்கத்தை உருவாக்கியவர் யார்? எப்படி இவர்களுக்கு குண்டு வெடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தெரியும்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை  கிளப்பி உள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் ஒருவர் இது குறித்து கேள்வி  எழுப்பியதும் இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டது. அதற்கான வீடியோ பதிவு இங்கே
இந்த செய்தியினை https://worldtruth.org என்ற தளம் வெளியிட்டுள்ளது.



இன்னும் பத்திரிகைகளால் வெளியிடப்படாத செய்தி என்னவெனில், போஸ்டன் குலோப் (Boston Globe) என்ற செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் (Twitter) தளத்தில் இன்று இந்த குண்டுவெடிப்பு நடந்த பாய்ல்ஸ்டன் (Boylston) தெருவில் உழல நூலகத்தின் எதிரே போஸ்டன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்தும் கட்டு படுத்தப்பட்ட வெடிப்பு நிகழ்வு நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.



அதுபோல் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில்" அங்கு ஏற்கனவே குண்டுகளை கண்டறியும் நாய்கள் பல குவிக்கபட்டிருந்தது" என்று கூறினர்.



மேலும் இந்த மராத்தான்  ஓட்டத்தில் பங்கேற்ற அலக்டைர்  ஸ்டீவென்சன் (Alastair Stevenson) என்பவர் கூறுகையில், அங்குள்ள போலீசார் இது ஒரு சோதனை பயிற்சி என்று ஒலிபெருக்கி மூலம் மீண்டும் மீண்டும் கூறியதாகவும், வீரர்கள் யாரும் பங்கேற்க  வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறிகிறார்.


எது எப்படியோ! இனி அமெரிக்கா யார் மேலாவது பலி போட்டு தனது அட்டூழியத்தை செய்யதொடங்கும்.

4:57 PM | தலைப்பு: , , | Read More »

இஸ்ரேலிய உளவாளிகளை அம்பல படுத்திய ஹாக்கர்கள்

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் இஸ்ரேலை வலை தளத்திலிருந்து துடைத்து எறியப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதில் இஸ்ரேலியர்களின் பல்லாயிரக் கணக்கான முகநூல் பக்கங்கள், டிவீட்டர் பக்கங்கள், பல வங்கிகளின் வலை தளங்கள், வெளியுறவு துறை இணையதளம், ஜெருஸலம் வங்கி இணையதளம்,இஸ்ரேல் பாதுகாப்பு துறை இணைய தொடர்பு, இஸ்ரேலிய பிரமரின் அதிகாரபூர்வ இணையதளம் இன்னும் மொசாத் உளவு பிரிவுன் இணையதளம் (ஹாக்) முடக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த பல தகவல்களை அன்னனிமஸ் ஹாக்கர் குழுமம் வெளியிட்டது.

இந்த ( ஹாக்) இணையதள முடக்க நடவடிக்கை மூலம் 123 இஸ்ரேலிய உளவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று காசாவின் ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனை எகிப்தின் அல் ஸாப் அல் மஸ்ரி என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த 123 உளவாளிகளில் 48 எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் பங்கு சந்தை வர்த்தகத்திலும், 52 பேர் எகிப்தின் மத்திய தொலைகாட்சி மையம் உள்ள  கட்டிடத்திலும், 15 பேர் லிபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணறுகளிலும், 10 பேர் எகிப்தின் தொலை தொடர்பு வட்டத்திலும், 3 பேர் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களின் பெயர்கள் விரைவில் எகிப்தின் உளவு பிரிவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்மையான உளவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலின் உளவாளிகளை போல முயற்சியினை இஸ்ரேலிய அரசாங்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

1:37 PM | தலைப்பு: , | Read More »

ஐபோனில் ஃப்ரீயாக பேச வேண்டுமா?


ஐபோனில் ஃப்ரீயாக பேச வேண்டுமா?


How to make Free Calls on Your iPhone
பேசும் போன்காலிற்கு, அதற்குரிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்திடம் இருந்து, பணம் வசூலிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் பணமே இல்லாமல் பேச ஒரு வசதியினை ஐபோனில் எளிதாக பெறலாம். இது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.
ஃப்ரீயாக ஐபோனில் பேச நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஐகால் அப்ளிக்கேஷனைஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்வது தான். இந்த ஐகால் வசதியினை எல்லோருமே எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐகால் அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து, அதில் லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு வேண்டிய நம்பரை டையல் செய்து, ப்ளேஸ் கால் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆட்டோமெட்டிக்காக, டையல் செய்த நம்பருடன் இணைக்கப்படும். பின்னர் பணம் இல்லாமல் ஃப்ரீயாக பேசலாம்.
ஆனால் இந்த ஃப்ரீ கால் 5 நிமிடத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் நாம் டையல் செய்து பேசிக்கொள்ளலாம். இப்படி எத்தனைமுறை செய்தாலும், அதில் 5 நிமிடங்கள் ஃப்ரீயாக பேச முடியும். ஆனால் இதில் முதலில் 10 நொடி விளம்பரத்திற்கு பிறகு, கால் வசதி இணைக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எத்தனை தனித்துவம் பெற்றுள்ளது எனஅபது அனைவருக்கும் தெரியும். ஒரு நொடி கூட கட்டணமில்லாமல் பேசமுடியாத என்ற நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐகால் அப்ளிக்கேஷன் வசதி மிக சிறப்பான ஒன்றாக இருக்கும். இது போன்ற காரணத்தால் ஆப்பிள் நிறுவனத்தின் தனித்துவம்
இன்னும் அதிகரிக்கிறது.

5:23 PM | தலைப்பு: , | Read More »

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added