|

தமிழக பட்ஜெட் : கோதுமை, இன்சுலினுக்கு வாட் வரி ரத்து


சென்னை: தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு இந்த ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனை பட்டா, 60 ஆயிரம் பசுமை வீடுகள், குடிசைகளுக்கு இலவச சிஎப்எல் பல்புகள் உள்பட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் எம்எல்ஏக்கள் காலை 9 மணி முதலே சபைக்கு வரத் தொடங்கினர்.

முதல்வர் ஜெயலலிதா, 9.45-க்கு அவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் அவைக்குள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தேமுதிகவினர் வந்தனர். காலை 10 மணிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் சொல்லி அவையை தொடங்கி வைத்தார். பின்னர், பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார்.

இதைத்தொடர்ந்து, 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் சபையில் தாக்கல் செய்து படித்தார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது, பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* புயல் பாதித்த 2 மாவட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

* தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டம் இயற்றப்படும்.

* நடப்பாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3% ஆக உயர்த்தப்படும் .

* தமிழக பொருளாதார வளர்ச்சியில் சேவைத்துறை வளர்ச்சியே பெரும் பங்கு வகிக்கும்.

* நகர்ப்புற வறுமையைப் போக்க தமிழக நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கம். வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மை.

* பேரிடர்களை சமாளிக்க சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

* தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம்.

* 4340 காவலர் குடியிருப்பு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு.

* நடப்பு ஆண்டில் முதன்மைத்துறை 2.36 சதவீதமாகவும் உற்பத்தித்துறை 7.12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. வரும் ஆண்டில் முதன்மைத்துறை

மற்றும் உற்பத்தித்துறை அமைக்க நடவடிக்கை.

* சாலை பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.65 கோடி ஒதுக்கீடு.

* ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்பு துறைக்கு ரூ.197.6 கோடி ஒதுக்கீடு.

* வேளாண்துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.ரூ.3804 கோடி ஒதுக்கீடு.

* தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம். மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.

* நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.

* நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* விவசாய விலைப்பொருள் கிடங்கு அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தமிழகம் முழுவதும் உள்ள 49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தரமாக்கப்படும்.

* சென்னையில் வெற்றி அடைந்த இ- சவான் திட்டத்தை 5 மாவட்டங்களில் விரிவாக்க திட்டம்.

* கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.4000 பயிர் கடன் வழங்கப்படும்.

* நாட்டுக்கோழி வளர்க்க சிறப்பு திட்டம்.

* விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.4000 கோடி வட்டியில்லா கடன் வழங்க திட்டம்.

* வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த புதிய மின் ஆளுமை திட்டம்.

* நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.736.15 கோடி ஒதுக்கீடு.

* உணவு தானியங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 105 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு.

* உணவு தானியங்களுக்கு வரும் நிதியாண்டில் 120 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு.

* 10 லட்சம் விவசாயிகளை பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரத் திட்டம்.

* விவசாயிகளுக்கான வட்டி சலுகை ரூ.160 கோடி ஒதுக்கீடு.

* 1.5 லட்சம் பெண்களுக்கு ஆடு, மாடு வழங்க ரூ. 244 கோடி ஒதுக்கீடு. 2 ஆயிரம் பேருக்கு கறவை மாடுகள், 1.2 லட்சம் பேருக்கு ஆடுகள் வழங்கப்படும்.

* வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 32 மாவட்டங்களில் தொழிற்மைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* தமிழக நீர்வள மேலாண்மைக்கு ரூ.3624 கோடி ஒதுக்கீடு.

* வடசென்னை தொழில் வளர்ச்சிக்கு வடக்கு துறைமுகம் இணைப்புத் திட்டம்

* தமிழக உணவு மானியத்துக்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிக்காரணையில் சதுப்பு நில மேம்பாட்டுக்கு ரூ.15.7 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

* தமிழக உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்.

* தமிழக உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்.

* ஆண்டு தோறும் 1000 தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க திட்டம். இத்திட்டத்தில் பயிற்சி பெறுவோரில் 50% பேர் பெண்கள்.

* தமிழகம் முழுவதும் உள்ள 1500 கிலோமீட்டர் நீளம் உள்ள சாலைகளை அகலப்படுத்த ரூ.740 கோடி ஒதுக்கீடு.

* சாலை பராமரிப்புக்கு ரூ.1180 கோடி ஒதுக்கீடு.

* தமிழகம் முழுவதும் 3000 புதிய பேருந்துகள் வங்க ரூ.548 கோடி ஒதுக்கீடு.

* அனைத்து அரசு பேருந்துகளிலும் மின்னணு பயணச் சீட்டு வழங்க வரும் ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் பல்லுயிரின பாதுகாப்புக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு .

* தமிழகத்தில் குடிசை வீடுகளில் இழை மின் விளக்கிற்கு பதிலாக ரூ.14 .62 கோடி செலவில் 1462 லட்சம் குடிசை வீடுகளுக்கு சி.எப்.எல் பல்ப் வழங்கத்

திட்டம்.

* 60,000 வீடுகளுக்கு சூரிய மின் விளக்கு வழங்க ரூ.180 கோடி ஒதுக்கீடு.

* 20,000 தெருவிளக்குகளுக்கு ரூ.50 கோடி செலவில் சூரிய ஒளி மின்சக்தி வழங்கப்படும்.

* வீடு விலை குறைவதற்கு வீட்டு கட்டுமான தரப்பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும். தரப்பரப்பளவு குறியீடு குறைவால் வீட்டு விலை குறையும்.

* விலையில்லா காலணி (ஒன்று முதல் பத்தாம் வகுப்பு), இலவச புத்தகப்பை (ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு) வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.814.03 கோடி ஒதுக்கீடு.

* 20 புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் 50 கால்நடை துணை மையங்கள் தொடங்கப்படும்.

* சங்கரன் கோவிலில் கோழி வளர்ச்சி மையம் அமைக்கப்படும்.

* கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு. அடிப்படை வசதியில்லாத குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதியை மேம்படுத்த

ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு 1,00,053 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டித் தரப்படும். இத்திட்டத்திற்கு இந்திரா நினைவு குடியிருப்பு

திட்டத்தின் கீழ் ரூ.666 கோடி ஒதுக்கீடு.

* தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு.

* தமிழக விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு ரூ.103.48 கோடி ஒதுக்கீடு.

* இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க விரைவாகவும் திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்பு படை ஏற்படுத்தப்படும்.

* 100 பின்தங்கிய வட்டாரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானத்தில் உள்ள குறைபாடுகளை போக்க மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி என்ற சிறப்பு நிதி உருவாக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடி.

* பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் இந்த ஆண்டில் தொடங்கப்படும். இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர 37 மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ரூ.1.93 கோடியில் அமைக்கப்படும்.

* வட்டாட்சியர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்டந்தோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.

* திருச்சியில் வேளாண் வர்த்தக மேம்பாட்டு மையம்.

* அணைகளை மேம்படுத்த ரூ.745.49 கோடியில் அணைகள் புனரமைப்பு -மேம்பாட்டு திட்டம்.

* மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பழநி தண்டாயுதபாணி கோயில்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

* * மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.720 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி மாணவர்களுக்கான சீருடையில் ஆண்களுக்கு முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். இதற்காக ரூ.329.89 கோடி நிதி ஒதுக்கீடு.

* எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு.

* * சென்னை நகரில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 337 இடங்களில் ரூ.300 கோடியில் சுத்திகரிப்பு செய்ய திட்டம்.

* ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.748.39 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் தகுதி 60 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படும்.

* இலங்கை அகதிகளுக்கு 2,500 வீடுகள் கட்டித் தர ரூ.25 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது வழங்கப்படும் நிதியுதவி, ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* கோதுமை, ஓட்ஸ், ஹெல்மெட், இன்சுலின் மீதான மதிப்பு கூட்டு வரி முழுமையாக ரத்து.

* எலக்ட்ரிக் பைக்குகள், காம்பக்ட் புளோரசன்ட் குழல் விளக்குகள், மரக் குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நாப்கின், டயாபர்களுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.

* இரு சக்கர வாகனம் தவிர மற்ற வாகனங்களுக்கான வரிகள் சீரமைக்கப்படும்.

* வாகனங்களுக்கு சிறப்பு பதிவு எண் பெறுவதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும்.

* வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சொத்துக்களுக்கான திருத்திய வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) அமல்படுத்தப்படும்.

* விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரைத் தீர்வை விதிக்கப்படும் ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வை 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

* உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டணம் 50% உயர்த்தப்படும்.

சமர்பிக்கப்பட்ட பட்ஜெட்டை காண இங்கே சொடுக்குக


பதிவு செய்தவர் ah kdnl on 4:36 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added