தென் ஆப்ரிக்கா அபார ஆட்டம் * நியூசி., பவுலர்கள் ஏமாற்றம்
வெல்லிங்டன்:மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சொந்த மண்ணில் நியூசிலாந்து பவுலர்கள் ஏமாற்றினர்.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டின் முடிவில், தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெல்லிங்டனில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், "பீல்டிங்' தேர்வு செய்தார். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது.
ஆம்லா அரைசதம்:
முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித் (13) ஏமாற்றினார். பின் இணைந்த அல்விரோ பீட்டர்சன், ஆம்லா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது, ஆம்லா (63) அவுட்டானார். அடுத்து வந்த டுமினியுடன் இணைந்த பீட்டர்சன், அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 42 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பீட்டர்சன் (44), டுமினி (23) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பிராஸ்வெல், கில்லஸ்பி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பதிவு செய்தவர் ah kdnl
on 11:18 AM. தலைப்பு
செய்திகள்,
பார்க்க,
விளையாட்டு
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன