கால்பந்து வீரர் மைதானத்தில் மரணம்
பெங்களூர், மார்ச் 22: மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
பெங்களூர் கெளதமபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் வெங்கடேஷ் (23). இவர் புதன்கிழமை மாலை பெங்களூர் கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெங்கடேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சுருண்டு கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் இல்லாததையடுத்து நிலைமையை உணர்ந்த சக வீரர்கள், அவரை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பெங்களூர் கால்பந்து மைதானத்தில் உயிரிழந்த 4-வது வீரர் வெங்கடேஷ் ஆவார். 1993-ல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் தத்தா, 2004-ல் கிறிஸ்டியானா டியானோ, 2008-ல் அல்லபிடிஜுவ்ரே ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்த சாந்திநகர் எம்எல்ஏ ஹாரீஷ் வெங்கடேஷின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது ஏற்பாட்டின் பேரில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்திலேயே வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தது கால்பந்தாட்ட வீரர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்தவர் ah kdnl
on 4:11 PM. தலைப்பு
செய்திகள்,
பார்க்க,
விளையாட்டு
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன