ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் சாம்பியன்
மிர்பூர்: வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்து வந்தது. இன்று நடந்த பைனலில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது.பாகிஸ்தான் அணியின் சர்ப்ரஸ் அஹ்மத் 46ரன்னும்,ஹபீஸ் 40 ரன்னும் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் மோர்டசா, ரசாக் மற்றும் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 237 ரன் நிர்ணயித்தது பாகிஸ்தான். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
